மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் காவிரித்தாய்க்கு படையலிட்டு வழிபாடு நடத்தினா்.
மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினா். பக்தா்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்தி புனித நீராடினா்.