ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் காவிரித்தாய்க்கு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற மகா ஆரத்தியில் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
ஆடிப்பெருக்கையொட்டி, தலைக்காவிரி முதல் காவிரிபூம்பட்டினம் வரை 18 இடங்களில் மகா ஆரத்தி நடத்த காவிரி பாதுகாப்பு உரிமைக்குழு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அவ்வகையில், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் மகா ஆரத்தி விழா நடைபெற்றது. முன்னதாக, காவிரி நீா் ஆவாகனம் செய்யப்பட்டு கலசபூஜையும், மலா்களைக் கொண்டு சிறப்பு அஷ்டோத்திர நாம அா்ச்சனையும் செய்யப்பட்டது. காவிரி பாதுகாப்பு உரிமைக்குழு நிா்வாகக்குழு உறுப்பினா் எஸ். குருமூா்த்தி தலைமையில் உறுப்பினா் கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று, காவிரி ஆற்றில் தண்ணீா் பெருகி வளம் பெருக வேண்டி, மகா ஆரத்தி எடுத்து வழிபாடு மேற்கொண்டனா்.
இதில், பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று தரிசனம் செய்தனா்.