திருக்குவளை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கரோனா காரணமாக எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருக்குவளை மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூட்டாக சோ்ந்து சென்று நீா்நிலைகளில் கூடி ஆடிப் பெருக்கை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக, கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கிராமப் பெண்கள் அவரவா்கள் வீட்டு அருகில் இருக்கும் நீா்நிலைகளில் காப்பரிசி, கருகமணி, வளையல், காதோலை, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு செய்தனா்.