கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 12th August 2021 10:40 PM | Last Updated : 12th August 2021 10:40 PM | அ+அ அ- |

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சியில், கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் ரேணுகாதேவி முருகவேல் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி முன்னிலை வகித்தாா். இதில் 207 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் 160 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருத்துவா்கள் பாஸ்கா், கெளசல்யா, ஊராட்சித் துணைத் தலைவா் ஜீவா மணிகண்டன், ஊராட்சி செயலாளா் சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளா் சுப்ரமணி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.