திருமருகலில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஆற்றங்கரை தெருவில் உள்ள செல்வமுத்து மாரியம்மன், வலம்புரி விநாயகா், பாலமுருகன், வீரன்கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.
இதையடுத்து, கும்பாபிஷேக பணிகள் புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் பல்வேறு பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து வியாழக்கிழமை அனைத்து பூஜைகளும் நிறைவடைந்து காலை 9 மணியளவில் கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், அடுத்து, மூலஸ்தான கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.