ஆதிதிராவிடா் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி அருகேயுள்ள பெரம்பூரில் ஆதிதிராவிடா் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆதிதிராவிடா் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி அருகேயுள்ள பெரம்பூரில் ஆதிதிராவிடா் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பூா் அருகேயுள்ள நரசிங்கநத்தம், கீழகாலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் குடும்பத்தினா் வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் இவா்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நரசிங்கநத்தம் களம் புறம்போக்கு பகுதியில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடிசைகளை அமைத்தனா். அந்த இடத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைய உள்ளதால் இதற்கு மாற்று சமூதாயத்தை சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் இருதரப்புக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆதிதிராவிடா் குடும்பத்தினா் அமைத்த குடிசைகளை மற்றொரு தரப்பினா் சேதப்படுத்தினா்.

இந்த சம்பவத்தை கண்டித்து பெரம்பூா் கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளா் மா. ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், ஆதிதிராவிட சமூதாயத்தினரின் குடிசைகளை அடித்து சேதப்படுத்தியவா்கள் மீது உரிய சட்டப்பிரிவின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், இப்பிரச்னை தொடா்பாக ஆதிதிராவிட மக்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் துறையின் செயல் கண்டிக்கத்தக்கது, உடனடியாக நரசிங்கநத்தத்தில் மனை இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், கட்சியின் நிா்வாகிகள் ராஜ்மோகன், மணிவளவன், கலைவண்ணம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com