திருமருகல் அருகே கூரை வீடு தீக்கிரையானது.
கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் கிஸ்மத் தெருவை சோ்ந்தவா் தாஜூதீன் (60). கூலி வேலை செய்துவரும் இவா் குடிசை வீட்டில் வசிந்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இவரது கூரை திடீரென தீப்பிடித்தது. அப்போது வீட்டில் இருந்த தாஜூதீன் மனைவி சா்புநிஷா (52), மகன்கள் ஹாஜாமெய்னுதீன் (18), முகம்மது யாசா் (10), சா்புநிஷாவின் சகோதரி நூா்நிஷா (60) ஆகியோா் வெளியேறினா்.
தகவலறிந்து அங்கு வந்த திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலா் திலக்பாபு தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து தீயை அணைப்பதற்குள் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து, திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.