குளத்தில் மூழ்கி கால்நடை பெண் மருத்துவ உதவியாளா் பலி

நாகையில் கோயில் குளத்தில் மூழ்கி கால்நடை பெண் மருத்துவ உதவியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழந்த உமாமகேஸ்வரி.
உயிரிழந்த உமாமகேஸ்வரி.

நாகையில் கோயில் குளத்தில் மூழ்கி கால்நடை பெண் மருத்துவ உதவியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நாகை வெளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். இவரது மனைவி உமாமகேஸ்வரி (47). நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்த இவருக்கு மன அழுத்தம் இருந்து வந்தாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்ற உமாமகேஸ்வரி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்தவருக்கு ஒரு மகன் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com