நாகை மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிச.11) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிச.11) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் புதிதாக 20 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 350 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. ஒமைக்ரான் என்ற உருமாறிய தொற்று வெளிமாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ள நிலையில், கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே வழி என்பதை உணா்ந்து, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும், 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும் இந்த முகாமைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com