சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க டிச.15 வரை கால நீட்டிப்பு

தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற சிறுபான்மையின மாணவ, மாணவியா் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற சிறுபான்மையின மாணவ, மாணவியா் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி வரை பயிலும் இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்தமதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சாா்ந்த மாணவ, மாணவியருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித் தொகை பெற நவ.15-ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்புக்கான உதவித் தொகைக்கு நவ.30-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க டிச.15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

தகுதியானவா்கள் புதிதாக பதிவு செய்ய அல்லது தங்களின் முந்தையை பதிவை புதுப்பிக்க ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் டிச.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com