திருக்கடையூா் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விழுப்புரம் முதல் நாகை வரை 4 வழிச்சாலை அமைக்கும் வெல்ஸ்பன் நிறுவனம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் வெல்ஸ்பன் நிறுவன சாலை பாதுகாப்பு துறை மேலாளா் கோபிராஜ் பங்கேற்று மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து பேசினாா். இதில், வெல்ஸ்பன் பாதுகாப்பு துறை அலுவலா்கள் வேலு, மணிமாறன், சமூகப்பணி துறை அலுவலா் மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.