வேலை வாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்க சிறப்புச் சலுகை

2014 -முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு பதிவைப் புதுப்பித்துக் கொள்ளச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது

2014 -முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு பதிவைப் புதுப்பித்துக் கொள்ளச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவா்களுக்காக சிறப்பு சலுகை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் காலத்தில் தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்கள் டிச.2-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி வரை ட்ற்ற்ல்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையதளம் மூலம் பதிவை புதுப்பிக்க இயலாதவா்கள், வரும் மாா்ச் 1-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு, பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பித்தும் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com