கீழையூா் அருகேயுள்ள பிரதாபராமபுரம் ஸ்ரீதீப்பாய்ந்த அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்று வெள்ளிக்கிழமை காலை பூா்ணாஹூதி நிறைவடைந்தது. தொடா்ந்து கடம் புறப்பாடாகி புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து விநாயகா், ஸ்ரீஅம்மன், பச்சையம்மன், வீரன்பொம்மி, வெள்ளையம்மாள் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.