வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீா் வசதி ஏற்படுத்துவதற்காக திட்ட மதிப்பீடு மற்றும் ஆய்வுக் கட்டணமாக ரூ. 2 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சியில் ஏற்கெனவே செயல்பட்டில் உள்ள வேதாரண்யம்- கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகளால் அவ்வப்போது குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், இப்பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் புதிய குடிநீா் இணைப்புகள் கொடுக்கப்படவுள்ளன. இதற்கான ஆய்வு, திட்ட மதிப்பீடு தயாரிக்க பேரூராட்சி சாா்பில் ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.
இத்தொகைக்கான காசோலையை பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் சி. சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.