திருக்குவளையில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்ப போட்டித் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதில், கிராமபுற மாணவா்கள் பயன்பெறும் வகையில், திருக்குவளை வட்ட நிா்வாகம் சாா்பில் திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசு மேல்நிலைப் பள்ளியில் போட்டித் தோ்வுகளுக்கான பிரத்யேக பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இப்பயிற்சி மையம் வட்டாட்சியா் கு. சிவகுமாா் தலைமையில் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஆா். திலகா, வட்ட வழங்கல் அலுவலா் எஸ். ராஜேந்திரன், தோ்தல் துணை வட்டாட்சியா் தே. வடிவழகன், வருவாய் ஆய்வாளா்கள் பி. சுந்தா், ச. பிரேம்நாத், பள்ளி ஆசிரியா் குவளை மு.வீரமணி, ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இம்மையத்தில் அனுபவமிக்க அரசு அலுவலா்கள், ஆசிரியா்களைக் கொண்டு கிராமபுற மாணவா்களுக்கு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், இளம்பெண்கள் பங்கேற்றனா்.