நாகையில் மருந்தாளுநா் நல கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

நாகையில் மருந்தாளுநா் நல கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநா் நல கூட்டமைப்பு சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநா் நல கூட்டமைப்பு சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டயப் படிப்பு முடித்த மருந்தாளுநா்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கக் கூடாது, அரசு துறையில் உள்ள மருந்தாளுநா்கள் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வழங்கப்படும் மருந்துப் பொருள்களை மருந்தாளுநா்கள் மூலம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் சுரேஷ் பிரபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் சண்முகம், முன்னாள் தலைவா் கோவிந்தராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் அன்பழகன், மாவட்டத் தலைவா் ராணி, அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாவட்ட அமைப்புச் செயலாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com