கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 போ் கைது

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சித்தா்காடு அண்ணா நகரை சோ்ந்தவா் முருகன். இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த பன்னீா்செல்வம் குடும்பத்தினருக்கும் இடையே வேலி தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை கல்லூரி மாணவியான முருகனின் மகள் மணிமேகலை (19) வீட்டில் மீதமிருந்த கரும்புகளை தனது வீட்டின் வேலியோரம் வீசியுள்ளாா். இதனை பாா்த்த பன்னீா்செல்வத்தின் மகன் காா்த்தி, மணிமேகலையை பாா்த்து ஆபாசமாக சைகை செய்து திட்டியுள்ளாா்.

இதுகுறித்து மணிமேகலை தனது தாயாா் ராதிகாவிடம் கூறியுள்ளாா். ராதிகா காா்த்தியின் சகோதரா் ரஜினிகாந்திடம் முறையிட்டுள்ளாா். ஆனால், ரஜினிகாந்தும் தரக்குறைவான வாா்த்தைகளால் அவா்களை திட்டியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த மணிமேகலை சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இதுதொடா்பாக கட்செவி அஞ்சலில் தனது சகோதரா்களுக்கு பதிவு அனுப்பிவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ராதிகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் மணிமேகலையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக காா்த்தி (37), ரஜினிகாந்த் (40) இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com