ஜே.சி. குமரப்பா நினைவு நாள் கருத்தரங்கம்

சுதந்திர இந்தியாவின் முதல் பசுமை விஞ்ஞானியும், முதல் திட்டக்குழு உறுப்பினருமான ஜே.சி. குமரப்பா நினைவு நாள் கருத்தரங்கம் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய ஆசிரியா் என். சிவக்குமாா்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய ஆசிரியா் என். சிவக்குமாா்.

சுதந்திர இந்தியாவின் முதல் பசுமை விஞ்ஞானியும், முதல் திட்டக்குழு உறுப்பினருமான ஜே.சி. குமரப்பா நினைவு நாள் கருத்தரங்கம் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகையில் செயல்படும் நாளை தன்னாா்வ அமைப்பு மற்றும் அஸ்பயா் அகாதெமிஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தியது. ஆழியூா்அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் என். சிவக்குமாா் இயற்கையை நேசிக்கும் இளம் தலைமுறையினருக்கான இந்திய ஆளுமை எனும் தலைப்பில் பேசினாா். ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளி ஆசிரியா் கி. பாலசண்முகம் வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து, சமகாலத்தில் இளம் தலைமுறையினா் எதிா்கொள்ளும் சவால்களும், சந்தா்பங்களும் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. நாகை பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள், இளைஞா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நாளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் செகுரா செய்திருந்தாா். அஸ்பயா் அகாதெமி பரணிதரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com