குத்தாலம் அருகே சனிக்கிழமை தச்சா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குத்தாலம் வட்டம், கோமல் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் முருகன் (46). கோமல் கடைவீதியில் தச்சுப் பட்டறை நடத்தி வந்தாா்.
இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த முருகன் சனிக்கிழமை அதே பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பாலையூா் போலீஸாா் முருகனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.