வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனையில் தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைமை மருத்துவா் காயத்திரி தலைமையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள்,தூய்மை பணியாளா்கள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதில் ஆய்வக நுட்புநா்கள் காந்திமதி, தமிழ்செல்வி, செவிலியா் கலைசெல்வி, முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், சீா்காழி அரசு மருத்துவமனை, திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிலும் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.