நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை வரை 8,444 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
இதன் மூலம், இந்த மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,447 ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையில், சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 7 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8, 253 ஆக உயா்ந்துள்ளது. 66 போ் சிகிச்சையில் உள்ளனா்.