பொறையாா் அருகேயுள்ள சந்திரபாடியில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிமுக மாவட்ட துணை செயலாளா் வா. செல்லையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைத்தல், மகளிா் பூத் கமிட்டி குழு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா். இதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சுந்தா், கண்ணன், முரளி, ஊராட்சித் தலைவா் பிரமிளா ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.