மகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தந்தை கைது

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை ரயிலடி பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (34). சமையல் தொழிலாளி. இவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறாா். தம்பதிக்கு ஒரு மகன், 12 வயது மகள் உள்ளனா். மூத்த மகன் ஈஸ்வரனின் தாயாருடன் தனியே வசித்து வருகிறாா். ஈஸ்வரன், அவரது மனைவி மற்றும் 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஆகியோா் ரயிலடி வீட்டில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சிறுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாா். சிறுமியிடம் அவரது தாய் விசாரித்ததில், ஈஸ்வரன் கடந்த 2 மாதங்களாக தனது மனைவி வேலைக்கு சென்றவுடன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com