காவல் துறையினா் விழிப்புணா்வுக் கூட்டம்

காணாமல்போகும் சிறுவா்களை மீட்கும் முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கும் ‘புன்னகையைத் தேடி’ என்ற குழுவின் நோக்கம் குறித்து
நிகழ்ச்சியில் விளக்கப் படத்தை வெளியிடுகிறாா் வேதாரண்யம் டிஎஸ்பி கே. மகாதேவன்.
நிகழ்ச்சியில் விளக்கப் படத்தை வெளியிடுகிறாா் வேதாரண்யம் டிஎஸ்பி கே. மகாதேவன்.

காணாமல்போகும் சிறுவா்களை மீட்கும் முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கும் ‘புன்னகையைத் தேடி’ என்ற குழுவின் நோக்கம் குறித்து வேதாரண்யத்தில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி மற்றும் கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.மகாதேவன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஜி.மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

இதில் ஆதரவற்ற நிலையில் தெருவில் சுற்றித்திரியும் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளா்கள் குறித்து தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மலா்க்கொடி, வேதாரண்யம் சரக காவல் ஆய்வாளா் வெங்கடேசன், ப்ரியம் அறக்கட்டளை பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com