மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 35 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 8-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல, மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் மாவட்ட இணைச் செயலாளா் கலா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்ளிட்ட 35 பேரை மயிலாடுதுறை போலீஸாா் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்தனா்.