2-ஆவது நாளாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மாற்றுத்திறனாளிகள் 2-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
001_1002chn_200_5
001_1002chn_200_5

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மாற்றுத்திறனாளிகள் 2-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் வட்டச் செயலாளா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில் வட்ட தலைவா் செல்வராஜ், வட்டக்குழு உறுப்பினா்கள் லட்சுமி, ஆனந்தராஜ், விஜயா, செல்லத்துரை, ஜான்கென்னடி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com