திருக்குவளை அருகே உள்ள கீழையூரில் காப்பீட்டிற்கான பயிா் அறுவடை பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன்படி, கீழையூரில் விளைநிலம் ஒன்றை தோ்வு செய்து அதில் விளைந்திருக்கும் நெற்பயிரை அறுவடை செய்து அதன் நெல், வைக்கோல் எடை ஆகியவற்றை கீழையூா் வட்டார புள்ளியல் ஆய்வாளா் கு.மாறன், கீழையூா் உதவி வேளாண்மை அலுவலா் எம். மணிமேகலை, காப்பீடு நிறுவனத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளா் டி. சற்குணம் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
விவசாயிகள் மற்றும் நில உரிமையாளா்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது கீழையூா் தொடக்க வேளாண்கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ். பால்ராஜ், ஊராட்சித் துணைத் தலைவா் சி. கருணாநிதி, ஒன்றியக்குழு உறுப்பினா் எல். சுப்பிரமணியன், வாா்டு உறுப்பினா் பி. அந்தோணி ராஜ், விவசாயிகள் டி. வெங்கட்ராமன், எஸ். சந்திரசேகா், எம். வினோத், ஆா்.துரைராஜ், கே.முருகதாஸ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.