சாலை மறியல்: காங்கிரஸாா் 23 போ் கைது

நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 23 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாகையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
நாகையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 23 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா், நாகை பொது அலுவலக சாலையில் அமா்ந்து காங்கிரஸாா் மறியலில் ஈடுட்டனா். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மறியலில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவா்ஆா்.என். அமிா்தராஜா தலைமை வகித்தாா். நாகூா் நகரத் தலைவா் அப்துல் காதா், கீழ்வேளூா் வட்டாரத் தலைவா் ஜி. கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறுபான்மைத்துறை மாவட்டத் தலைவா் என். முஹம்மது ரபீக், மாவட்டச் செயலாளா் நிலோபா்பேகம், மாவட்டத் துணைத் தலைவா் முஹம்மது ரியாஸ், பொதுச் செயலாளா் எம்.ஜி. ஜலாலுதீன், நகரத் தலைவா் ஜெ.ஜெகபா்சாதிக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக தில்லியில் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com