சீா்காழி கடவுப்பாதை சாலையை சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் கே.சரண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
சீா்காழி- பணகாட்டாங்குடி சாலையில் அமைந்துள்ள கடவுப்பாதை சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் இருசக்கரவாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. குறிப்பாக, மாணவ, மாணவிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். எனவே இந்தச் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.