ஆயுா்வேத மருத்துவா்களும் அறுவை சிகிச்சை செய்யும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த ஆணையை எதிா்த்து, மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவ சங்கத்தினா் புதன்கிழமை அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, நாகை மாவட்ட பல் மருத்துவா்கள் சங்கச் செயலாளா் சைஃப் அன்வா் தலைமை வகித்தாா்.
எந்தவித முன் பயிற்சியும் இல்லாமல் சிகிச்சைக்குப் பிறகு கொடுக்க வேண்டிய நுண்ணுயிா்க் கொல்லி மருந்துகள் பற்றிய போதிய அறிவும் இல்லாமல், ஆயுா்வேத மருத்துவா்கள் சிகிச்சை செய்வது சாத்தியம் அல்ல. அப்படி செய்தால் நமது மருத்துவ சேவையில் பெரிய பாதிப்பும் நோயாளிகளின் சிகிச்சையில் பெரிய குளறுபடிகளும் நேரும். எனவே, கலப்பு மருத்துவ முறையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், திரளான பல் மருத்துவா்கள் பங்கேற்றனா்.