காவலா்கள், நகராட்சிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி
சீா்காழி: சீா்காழி அரசு மருத்துவமனையில் காவலா்கள், நகராட்சிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடா்ந்து, முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, சீா்காழி அரசு மருத்துவமனையில் காவல் ஆய்வாளா், உதவிஆய்வாளா்கள், காவலா்கள் என 16 பேருக்கும், நகராட்சி அலுவலா், பணியாளா்கள், ஊழியா்கள் என 17 பேருக்கும், அரசு மருத்துவமனையை சோ்ந்த 2 பேருக்கும், மருத்துவ உதவியாளா் ஒருவா், 2-ஆவது டோஸ் 11 போ் என மொத்தம் 47 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்போது, தலைமை மருத்துவா் பானுமதி, அரசு மருத்துவா் மருதவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.