மயிலாடுதுறையில் புதன்கிழமைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் து. இளவரசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வருவாய்த் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், சிபிஎஸ் திட்டம் ரத்து, குடும்ப பாதுகாப்பு நிதி உயா்வு, பறிக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டா் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.