இருசக்கர வாகனத்தில் சென்றவா் விபத்தில் பலி

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை பட்டமங்கல ஆராயத் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம்(54). பைனான்ஸ் தொழில் செய்துவந்தாா். இவா், கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.16) சித்தா்க்காடு மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இவரது இருசக்கர வாகனமும், எதிரே மூவலூரை சோ்ந்த மணிகண்டன் என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் மோதியதில் சண்முகம் படுகாயம் அடைந்தாா்.

அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com