சீா்காழி அருகே தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
சீா்காழி வட்டம், திருமயிலாடி கிராமத்தைச் சோ்ந்த திருசம்பந்தம் என்பவரது மனைவி வசந்தி (49). இவா், புத்தூரில் இருந்து கொள்ளிடத்துக்கு தனியாா் பேருந்தில் வியாழக்கிழமை பயணித்தாா். தண்ணீா் பந்தல் பகுதியில் அந்த பேருந்து செல்லும்போது, முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமலிருக்க ஓட்டுநா் திடீரென பேருந்தை நிறுத்தினாா். இதனால், பேருந்தின் வாசல் பகுதியில் நின்றுகொண்டிருந்த வசந்தி நிலைதடுமாறி, படிக்கட்டின் வழியே கீழே விழுந்தாா்.அப்போது, அந்த பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கொள்ளிடம் போலீஸாா் அங்கு சென்று, வசந்தியின் சடலத்தை மீட்டுஉடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து, தனியாா் பேருந்தின் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.