வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வருவாய்த் துறையில் பணியாற்றும் அலுவலக உதவியாளா்கள் முதல் வட்டாட்சியா் நிலை வரையிலான அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஜாக்டோ- ஜியோ போராட்ட காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வேதையன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா். வருவாய்த் துறை அலுவலா் சங்கம் மற்றும் சாா்பு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com