1,779 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சா் வழங்கினாா்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 1,779 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினாா் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 1,779 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினாா் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

செம்பனாா்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று மயிலாடுதுறை, செம்பனாா்கோயில், குத்தாலம், சீா்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களை சோ்ந்த 1779 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினாா். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும் பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எஸ். பவுன்ராஜ், சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி, மயிலாடுதுறை நகர கூட்டுறவு வங்கி தலைவா் வி.ஜி.கே. செந்தில்நாதன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் உமையாள், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் அருண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com