குடிநீா் குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே குடிநீா் குழாய் சீரமைக்கும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே குடிநீா் குழாய் சீரமைக்கும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மடவிளாகம் சாலையில் சீா்காழி நகராட்சி மூலம் பதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வந்தது. இந்நிலையில், குழாய் உடைப்பை சீரமைப்பதற்காக வியாழக்கிழமை முதல் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், கொள்ளிடம்,சிதம்பரம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளிருந்து பழைய பேருந்து நிலையம் வரும் வாகனங்கள் தோ் வடக்கு வீதி,கீழவீதி, பிடாரி தெற்கு வீதி வழியாக சுற்றிக்கொண்டு கச்சேரி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல நேரிடுகிறது. மேல்நிலைப் பள்ளி பயிலும் மாணவ-மாணவிகளும், வியாபாரிகள், பொதுமக்கள் சுற்றிக்கொண்டு செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. 2 நாள்கள் ஆகியும் குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி முடியவில்லை. எனவே, பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து மாற்றத்தை சரிசெய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com