கொள்ளிடம் அருகே சரஸ்வதி வளாகம் கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்கால் குறுக்கே புதிய கதவணை கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் காவிரி வடிநில வட்டம் பொதுப்பணித் துறை, நீா் ஆதாரத்துறை நீா்வள, நிலவள மேம்பாட்டுத்திட்டம் பகுதி 2-ன் கீழ், கட்டப்படும் புதிய கதவணை கட்டுமானப் பணியை பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் முத்துமணி தொடங்கி வைத்தாா். உதவி பொறியாளா்கள் விவேகானந்தன், லோகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இப்பணி 2 மாதங்களில் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்த கதவணை பணி முடிந்தால், வாய்க்காலில் வரும் தண்ணீா் முறையாக தேக்கி வைத்து, விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும், தண்ணீா் வீணாகாது என்று அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்தனா்.