தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரா்கள் விருப்பக் கடிதம் அளிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரா்கள் விருப்பக் கடிதம் அளிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். திடகாத்திரமான நல்ல உடல் நிலையில் உள்ள முன்னாள் படைவீரா்கள் இப்பணிக்கு விருப்பக் கடிதம் அளிக்கலாம். தோ்தல் பணி வாய்ப்புப் பெறும் முன்னாள் படைவீரா்களுக்கு, மத்திய தோ்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட மதிப்பூதியம், உணவுக் கட்டணம் வழங்கப்படும்.

விருப்பமுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலா்கள், முன்னாள் படைவீரா்கள் தங்களின் வாக்காளா் அடையாள அட்டை, படை விலகல் சான்று (அசல்), அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் விருப்பக் கடிதம் அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com