நாகை மாவட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளா்கள் சங்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு எல்.பி.எஃப். டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் வீரபாண்டியன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். சிவதாஸ், மாவட்டச் செயலாளா் வீ.எம். மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், டாஸ்மாக் கடையில் விற்பனை நேரத்தை காலை 10 முதல் இரவு 8 மணி வரை மாற்றி அமைக்க வேண்டும், பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25 ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் டாஸ்மாக் தொழிற்சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.