நாகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வுக் கட்டணம் தொடா்பாக திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பருவத் ே தா்வுக்கான கட்டணம் வசூலிப்பதாக மாணவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையொட்டி, கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து, மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களிடம் 2 ஆவது முறையாக பருவத் தோ்வுக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்தப் போராட்டத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் ஒருங்கிணைத்தனா். கல்லூரி மாணவ, மாணவிகள் திராளாக பங்கேற்றனா்.