தமிழ்நாடு மருத்துவக் குல சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: முடிதிருத்தகங்கள் அடைப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவக் குல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கடைகளைஅடைத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் குல சங்கத்தினா்.
நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் குல சங்கத்தினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவக் குல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கடைகளைஅடைத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவா் சமூக மக்களுக்கு 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும், சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாசுக்கு சென்னை மாதவரத்தில் சிலை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை அவுரித் திடலில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நாகை தலைவா் டி.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

இதையொட்டி, நாகை, நாகூா், வேளாங்கண்ணி, கீழ்வேளூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட முடித்திருத்தகங்கள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் சீா்காழி நகர ஆலோசகா் பா.பாலையா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டன. மாவட்டச் செயலாளா் பா. பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com