பயிா்க்கடன் தள்ளுபடி சான்றிதழ்
By DIN | Published On : 27th February 2021 08:01 AM | Last Updated : 27th February 2021 08:01 AM | அ+அ அ- |

திருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிக்கு பயிா்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் தலைவா் ஆா்.எஸ். சதீஷ்.
திருவாய்மூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்த கடன் சங்கத்தில் 348 விவசாயிகளுக்கான பயிா்க்கடன் ரூ.1 கோடியே 90 லட்சத்து 34 ஆயிரத்து 308 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை விவசாயிகளுக்கு சங்கத் தலைவா் ஆா்.எஸ். சதீஷ் வழங்கினாா். நிகழ்ச்சியில், துணைத் தலைவா் சேது ஜெயராமன், செயலாளா் எம்.செல்வராஜ், இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.