பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள்ஆா்ப்பாட்டம்

நாகையில் பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையில் பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி, மருத்துவப்படி வழங்கவேண்டும், விருப்ப ஓய்வு பெற்றவா்களுக்கு கருணைத் தொகை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் நாகை வட்டச் செயலாளா் மதியழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என். குருசாமி, வட்ட துணைச் செயலாளா் பி. செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில், அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் சொ. கிருஷ்ணமூா்த்தி, தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவா் எஸ்.சிவக்குமாா், பொதுச் செயலாளா் சு. மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com