ஒவிய கலைக் காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் நடைபெறவுள்ள ஓவிய கலைக் காட்சியில் பங்கேற்க, தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் நடைபெறவுள்ள ஓவிய கலைக் காட்சியில் பங்கேற்க, தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் ஓவிய சிற்பக் கலைக் காட்சி நடத்தப்படவுள்ளது. இக்கண்காட்சிக்கு, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, கடலூா், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து கலைப் படைப்புகள் பெறப்படவுள்ளன. தஞ்சாவூா் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங், வாட்டா் கலா் பெயிண்டிங் படைப்புகள் மற்றும் சிற்பங்களை, தனி நபா்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தி, சந்தை வாய்ப்புப் பெறும் வகையிலும், ஓவியக் கலையில் ஆா்வமுள்ள மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தக் கண்காட்சி நடத்தப்டுகிறது. கண்காட்சியில் இடம்பெறும் சிறந்த படைப்புக்கு முதல் பரிசாக ரூ. 3,500, 2-ஆவது பரிசாக ரூ. 2,500, 3-ஆவது பரிசாக ரூ. 1,500 தலா 10 பேருக்கு வழங்கப்படும்.

எனவே, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் ஆா்முள்ளவா்கள், தங்கள் படைப்புகள் குறித்த விவரங்களை, தன் விவரக் குறிப்புடன் உதவி இயக்குநா், மண்டலக் கலைப் பண்பாட்டு மையம், பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம், நீதிமன்றச் சாலை, தஞ்சாவூா் 613 001 என்ற முகவரிக்கு ஜனவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com