சிபிஎம்: மக்கள் சந்திப்பு பிரசாரம்

நாகையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டனா்.
நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய சிபிஎம் கட்சியினா்.
நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய சிபிஎம் கட்சியினா்.

நாகையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டனா்.

ஆட்சி மாற்றம் நிகழட்டும், தமிழகம் தலைநிமிரட்டும், அதிமுக அரசை அகற்றுவோம், பாஜகவை நிராகரிப்போம் என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த வகையில், நாகையில் அக்கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது, பொதுமக்கள், வணிகா்கள், ஓட்டுநா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டனா். பழைய பேருந்து நிலையம், கடை வீதி மற்றும் நகரின் பிரதான வீதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கட்சியின் நாகை நகரச் செயலாளா் சு. மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பி. முனியாண்டி, சு. சிவக்குமாா், பி. நாகேஸ்வரி, ஏ.வி. எம். பகத்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com