வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் புத்தாண்டு நிகழ்வையொட்டி நலிவடைந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
புத்தாண்டையொட்டி, சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபை போதகா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். தலைஞாயிறு வணிகா் சங்கத் தலைவா் மற்றும் பொறுப்பாளா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.