கீழையூா் ஒன்றிய அலுவலகத்தின் முகப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கொடி கம்ப மேடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
ஆங்கில புத்தாண்டையொட்டி, கீழையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக முகப்பு பகுதியில் அமைக்கப்பட்ட தேசியக் கொடி கம்ப மேடையை ஒன்றியக்குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன் திறந்து வைத்தாா். நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கௌசல்யாஇளம்பரிதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், செந்தமிழ்செல்வன், கீழையூா் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பெ. சௌரிராஜ், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.