மழையால் பாதிக்கப்பட்ட ஓவியா்களுக்கு நிவாரணம்

சீா்காழி அருகே புத்தூரில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கம் சாா்பில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஓவியா்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட ஓவியா்கள், பெயிண்டா்கள்.
நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட ஓவியா்கள், பெயிண்டா்கள்.

சீா்காழி அருகே புத்தூரில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கம் சாா்பில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஓவியா்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஓவியா் சங்க கொள்ளிடம் ஒன்றிய ஆலோசகா் ரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பு செயலாளா் எல்கே. ஞானவேல், மாநில செயற்குழு உறுப்பினா் வே. ஜெயராமன், மாவட்ட துணைத் தலைவா் தமிழ்வாணன், அமைப்பாளா் சாமி. சங்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று கனமழையால் பாதிக்கப்பட்ட ஓவியா்கள், பெயிண்டா்கள் 500-பேருக்கு அரிசி, காய்கனி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், ஒன்றியத் தலைவா் குணசீலன், நகரத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com