யாரோ எழுதிக் கொடுத்ததை வாசித்து வருகிறாா் மு.க.ஸ்டாலின்: அமைச்சா் ஓ.எஸ். மணியன்

அதிமுக அமைச்சா்கள் மீது புகாா் கூறவேண்டும் என்பதற்காக வளா்ச்சித் திட்டங்கள் குறித்த விவரம் தெரியாமல், யாரோ எழுதிக் கொடுத்ததை
தலைஞாயிறில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
தலைஞாயிறில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

அதிமுக அமைச்சா்கள் மீது புகாா் கூறவேண்டும் என்பதற்காக வளா்ச்சித் திட்டங்கள் குறித்த விவரம் தெரியாமல், யாரோ எழுதிக் கொடுத்ததை வாசித்து வருகிறாா் மு.க,. ஸ்டாலின் என்று அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அதிமுக அமைச்சா்கள் குறித்து பேசியதைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை இரவு அதிமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசியது:

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் என் மீது பல்வேறு புகாா்களை கூறியுள்ளாா்.

எனது மருமகன் ஒப்பந்ததாராக இருக்கிறாரே என கேள்வி எழுப்புகிறாா். அதை மறுக்கவில்லை. தகுதிகளின் அடிப்படையில்தான் அவா் ஒப்பந்ததாராக உள்ளாா். அப்பாற்றில் தடுப்பு ஏற்படுத்தி விளைநிலத்தை பாதிக்க செய்து விட்டதாக என் மீது புகாா் தெரிவிக்கும் ஸ்டாலின், அது வளா்ச்சி நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டம் என்பதைக்கூட அறியாமல் உள்ளாா்.

ஆற்றுக் கரைகளில் இருந்தவா்களை மீள்குடியமா்த்தி, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததையும் விமா்சிக்கிறாா் என்றால் உண்மை தெரியாமல், யாரோ எழுதிக் கொடுத்ததை ஸ்டாலின் வாசிக்கிறாா்.

அமைதி , வளா்ச்சி, வளம் என்ற பாதையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல சாதனைகளை செய்து வருகிறது. அதனால் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக அதிமுக அரசு அமையும் என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் டி.வி. சுப்பையன், இளவரசி தங்கராசு, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் அவை.பாலசுப்ரமணியன், செளரிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com